தமிழக அரசு சார்பில் விரைவில் இலவச "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்"



தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதைத் தொடர்ந்து விரைவில் பொது மக்களுக்கு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இலவசமாக "டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்" வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:-

உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட உள்ளதால் பொதுமக்கள் யாரும் தனியார் நிறுவனங்களின் செட்டாப் பாக்ஸை விலை கொடுத்து வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக செலுத்தி இணைப்பு துண்டிப்பு செய்வதை தவிர்க்கவும். மேலும், சமீப காலமாக ஒரு சில உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் உரிமை பெற்றுக்கொண்டு அரசு கேபிள் இணைப்பை துண்டித்தும், தனியாருக்கு சாதகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியும், கட்டாயப்படுத்தியும், தனியார் செட்டாப் பாக்ஸ் வாங்க வற்புறுத்துவதாக புகார்கள் வருகின்றன.

அவ்வாறு யாரேனும் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் பெறுவதற்கு ஒவ்வொரு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் அவர்களது செட்டாப் பாக்ஸ் தேவைகளை வலைதளத்தில் www.tactv.in உள்நுழைவு (Login) செய்து CAF படிவத்தை தேர்வு செய்து அதில் சந்தாதாரர்களின் விவரங்கள், அதாவது பெயர், ஆதார் எண், பாலினம், மின் அஞ்சல், கைபேசி எண், பிறந்த தேதி, முகவரி, எஸ்டி செட்டாப் பாக்ஸ், எச்டி செட்டாப் பாக்ஸ் வீட்டு உபயோகத்திற்காகவா அல்லது வணிக பயன்பாட்டிற்காகவா போன்ற தகவல்கள் வரும் 2017 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...